search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம் எம்பி"

    பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி நன்றாக நடித்தார் என்று தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி சீனிவாஸ் கூறியுள்ளார். #Parliament #PMModi

    நகரி:

    பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி நானி என்ற சீனிவாஸ் கொண்டுவந்தார்.

    இதனால் அவர் பிரதமர் மோடி பதில் உரை நிகழ்த்திய பின்பு தீர்மானத்தை கொண்டு வந்தவர் என்ற முறையில் தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி சீனிவாஸ் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி அவர்களே தெலுங்கு தாயை தாயாக கூப்பிட்டீர்கள். இப்போது அந்த தாயை கொல்வதற்கு தயாராகி விட்டீர்கள். 2014 தேர்தலுக்கு முன்பு எத்தனையோ முறை ஆந்திராவுக்கு பிரசாரத்துக்கு வந்து வாக்குறுதிகளை அளித்தீர்கள். ஆந்திரா மக்களை மோசம் செய்து விட்டீர்கள். கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டீர்கள்.


    இப்போது பிரதமர் மோடி அற்புதமாக பிரசங்கம் செய்தார். அவரது 1½ மணிநேர பிரசங்கத்தை கேட்டேன். நீங்கள் சிறந்த நடிகர். ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சி விட்டீர்கள். அதிரடி சினிமா படம் பார்ப்பதுபோல் இருந்தது.

    ஆந்திரா பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்களும் தான் காரணம். ஆந்திரா பிரிவினை தீர்மானம் மேல்-சபையில் நிறைவேற பா.ஜனதாவும் ஒத்துழைப்பு அளித்தது.

    உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ராமாயணத்தில் இருந்து சரித்திரத்தை எடுத்துக் கூறினார். ஆந்திரா பிரிவினை சாஸ்திரிய முறைப்படி நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Parliament  #PMModi

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை விவாதத்திற்கு வரும்போது அந்த கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என கூறியுள்ளார். #MonsoonSession #Parliament #TDPMP
    அமராவதி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.



    இதில், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக நாளை விவாதம் நடத்தப்படுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. திவாகர் ரெட்டி, நாளை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விவாதத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கூட்டத் தொடரிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கொறடா உத்தரவிடுவது வழக்கமான நடைமுறைதான். எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி கவிழப்போவதில்லை. என்னாலும் விவாதத்தின்போது ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேச முடியாது. எனவே நான் சபையில் இருக்கிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை’ என்றார்.

    இவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அவரை தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தொடர்பு கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MonsoonSession #Parliament #TDPMP
    ×